அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரபல நடிகை சில்வினா லூனா. தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் 2011 ஆம் வருடம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இந்த அறுவை சிகிச்சையினால் அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்ட போதும் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வந்துள்ளது. இதனால் உயிர் காக்கும் கருவிகள் மூலமாக அவருக்கு சிகிச்சை கொடுத்து வந்த நிலையில் அவர் பலனின்றி உயிரிழந்துள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட மருந்தை சில்வினாவுக்கு செலுத்தியதாகவும் இதனால் தான் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரி ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர் அனிபால்லோ மீது வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.