அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரபல நடிகை சில்வினா லூனா. தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் 2011 ஆம் வருடம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இந்த அறுவை சிகிச்சையினால் அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்ட போதும் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வந்துள்ளது. இதனால் உயிர் காக்கும் கருவிகள் மூலமாக அவருக்கு சிகிச்சை கொடுத்து வந்த நிலையில் அவர் பலனின்றி உயிரிழந்துள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட மருந்தை சில்வினாவுக்கு செலுத்தியதாகவும் இதனால் தான் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரி ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர் அனிபால்லோ மீது வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
மாடல் அழகி மரணம்…. பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணமா….? ஒப்பனை நிபுணர் கைது…..!!
Related Posts
கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு… 50 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கோர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் 2500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த வெள்ளத்தினால் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில்…
Read more“மினி லாரி கவிழ்ந்து கோர விபத்து”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பரிதாப பலி…. 9 பேர் படுகாயம்…!!
பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துங்குவா மாகாணம் உள்ளது. இங்கிருந்து பஞ்சாப் மாகாணத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மினி லாரியில் பயணம் செய்தனர். இந்த மினி லாரி குஷப் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…
Read more