அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கில் இந்த மாதம் 8 ஆம் தேதி தலைசிறந்த ஓவியங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதில் ஏராளமான ஓவியர்கள் தங்களின் படைப்புகளை ஏலம் விட உள்ளனர். அவ்வகையில் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோவின் ஓவியம் ஒன்றும் இந்த நிகழ்ச்சியில் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு ஓவியம் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என பலரால் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று பிரபல ஓவியர் ஜீன் மைக்கேல் பாஸ்குயட் 1982 ஆம் ஆண்டு வரைந்த 8 அடி உயரமுடைய ஓவியம் ஒன்றும் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு 499 கோடி ரூபாய் வரை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.