திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாடார் கிராமத்தில் விவசாயியான ரகு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராகவி கண்ணன்கோட்டை கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி ராகவி பள்ளிக்கு சென்றார். மறுநாள் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராகவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராகவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நேற்று முன்தினம் ராகவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி ராகவி பள்ளி சிறப்பு வகுப்பில் இருந்த போது வாலிபர் சுவர் ஏறி குதித்து ஆபாசமாக பேசி காதலிப்பதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ராகவி தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டி அவரது பெற்றோரும், உறவினர்களும் நேற்று அரசு பள்ளி எதிரே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ராகவியின் தற்கொலைக்கு காரணமானவரை பள்ளி நிர்வாகம் கண்டிக்கவில்லை எனவும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்த பிரச்சனை குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஆறு மணிக்கு நேரம் அங்க போக்குவரத்து பாதிக்கப்பட்டது.