சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார், இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 31 வயது பெண்ணிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் அந்த பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

அந்த வழியாக சென்ற பெண்ணின் உறவினர் கூச்சலிட்டதால் மணிகண்டனை தப்பி ஓடினார். இதனை அடுத்து அந்த பெண்ணை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.