ஆந்திரா மாநிலத்தில் உள்ள குண்டூர் பகுதியைச் சேர்ந்த குர்ரா வெங்கடேஷ் என்பவர் குண்டூர் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் மிளகாய் தூள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் பகுதியில் நடராஜன் என்பவர் மகா ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் நடராஜன் ஆன்லைன் மூலமாக குண்டூர் மிளகாய் தூள் நிறுவனத்திற்கு 10 டன் மிளகாய்த்தூள் கேட்டு ஆர்டர் செய்தார்.

இதனையடுத்து வெங்கடேஷ் மகா ஏஜென்சி நிறுவனத்தில் இருக்கும் குடோனில் 10 டன் மிளகாய் தூள் இறக்கி வைத்தார். அதற்கு முன் பணமாக நடராஜன் 50,000 ரூபாய் பணத்தை மட்டும் கொடுத்தார். மீதமுள்ள 14 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு காசோலை கொடுத்துள்ளார். அந்த காசோலையை வெங்கடேஷ் வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்ப வந்தது. இதுகுறித்து வெங்கடேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் நடராஜன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.