திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் முகமது சித்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஏர்வாடி வடக்கு ரத வீதியைச் சேர்ந்த இசக்கி ராஜ் என்பவர் தனது வீட்டை இடித்து அப்புறப்படுத்தி தருமாறு சித்திக்கிடம் கேட்டார். இதனால் முகம்மது சித்திக் வேலையாட்களை அனுப்பி வீட்டை இடித்து கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சேகர், அவரது மகன் சரவணன் ஆகியோர் வீட்டை இடிக்க விடாமல் தடுத்தனர் இதனை சித்திக் தட்டி கேட்டதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சேகரும், சரவணனும் சித்திக்கை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சித்திக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.