தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கி 20ஆம் தேதி முடிவடைந்தது. இதனை சுமார் 1 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இதனையடுத்து விடைகள் திருத்தும் பணி மே 4 ஆம் தேதி முடிவடைந்து கடந்த மே மாதம் 18ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இதனிடையே 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் இன்று www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. SSLC APRIL 2023 RETOTAL RESULTS TOOTM வாசகத்தினை CLICK செய்த பின்னர், தோன்றும் பக்கத்தில் மறுகூட்டல் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.