மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இது எதுவும் தமிழ்நாடு மின்சார வாரியம் இதுவரை நிறைவேற்றியது கிடையாது . இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த மின்வாரிய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று  நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், போராட்டத்தால் மின்தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது