அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இன்று காலை 9.30 மணிக்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தமிழக முழுவதும் உள்ள அனைத்து மைய, கிளை நூலகங்களில் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி அறியலாம் என தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதனை மீறி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.