மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  கலைஞருடைய நூற்றாண்டில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெறுகின்ற மகளிர் சுய உதவி குழுக்கான கடன் உதவி வழங்குகின்ற நிகழ்ச்சியிலே வரவேற்புரையாற்றிய

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு துறையின் மேலாண்மை இயக்குனர் திருமதி திவ்யதர்ஷினி ஐஏஎஸ் அவர்களே… நன்றியுரை ஆற்ற உள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல் இயக்குனர் திருமதி ஸ்ரேயா சிங் ஐஏஎஸ் அவர்களே..

மாநில வங்கியாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு மோகன் அவர்களே….  வந்திருக்கக்கூடிய அருமை சகோதரிகளே,  தாய்மார்களே…. பத்திரிகை நண்பர்களே…. துறையினுடைய அதிகாரிகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்….

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தினுடைய வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வரும் 1877 மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பகுதியளவிலான கூட்டு அமைப்புகளை சேர்ந்த 24 ஆயிரம் பயனாளிகளுக்கு 125 கோடியே 50 லட்சம் ரூபாய் வங்கி கடன் வழங்குவதை  எண்ணி நான் மகிழ்ச்சி அடைகின்றேன்,  பெருமை அடைகின்றேன் என தெரிவித்தார்.