விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பேரூராட்சியில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் குடிநீர் கட்டணம் பாக்கி இருக்கிறது. இதே போல் 12 லட்சம் ரூபாய் சொத்து வரி கட்டணம் பாக்கி உள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி செயலாளர் கூறியதாவது, 2 கட்டணங்களையும் பாக்கி வைத்தவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும். அப்படி கட்டணத்தை செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை நிலுவை வைத்தவர்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட நடவடிக்கையை தவிர்க்குமாறு கூறியுள்ளார்.