விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுக்கம் காலனி பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது நண்பர்களான அஜித்குமார் உள்ளிட்ட சிலருடன் வழுக்கம் மெயின் ரோட்டில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்குளம் கிராமத்தை சேர்ந்த ஐயனார் என்பவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சாலையில் நின்று கொண்டிருந்த மணிகண்டன் தரப்பினருக்கும், அய்யனாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் மணிகண்டன் உள்பட 4 பேரும் அய்யனாரை சரமாரியாக தாக்கினர். இதனை பார்த்து அய்யனார் தரப்பினரும் அங்கு வந்து தகராறு செய்து ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக காவல்நிலையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.