தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மேற்பார்வை பொறியாளர் குருசாமி நுகர்வோர் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு புகார் மனுக்களை வாங்கியுள்ளார். மேலும் அந்த மனுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு தீர்வும் காணப்பட்டது. இந்த கூட்டத்தில் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.