திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி சார்பில் பிஷப் சார்ஜென்ட் நுண்ணறிவு குறைபாடுள்ளோர் சிறப்பு பள்ளியில் சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தமரியா தலைமையில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சித்த மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் சுபாஷ் சந்திரன், டாக்டர்கள் கணேசன், முத்துக்குமார், சுஜாதா, ஜோசப் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து டாக்டர்கள் டெங்கு அறிகுறிகள், நோய் வராமல் தடுக்க முன்னேற்பாடுகள், தற்காப்பு முறைகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக பேசி உள்ளனர். இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.