கே.வி பள்ளிகளில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால் துணைத் தேர்வு எழுதலாம். அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்திருந்தால் எழுத முடியாது. இது தொடர்பான வழக்கில் “மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு எத்தனை பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலும் துணைத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்” என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை எதிர்த்து கே.வி பள்ளிகள் நிர்வாகம் தற்போது மேல் முறையீடு செய்துள்ளது.