அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த 70 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் திடீரென விமானத்தின் கதவை திறக்கும் படி பதறி அடித்து அங்கும் இங்கும் ஓடியுள்ளார். அதன் பிறகு அவர் விமான கதவை திறக்க முயற்சி செய்த நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் அவரை பிடித்து அமர வைத்தனர். அந்த பயணி விமானத்தின் கதவை திறக்கும்படி அலறியதோடு தன் மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார். விமானத்தின் கதவை திறக்கவில்லை என்றால் என் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று விடுவேன் என அவர் கூறியுள்ளார்.

விபரீதத்தை உணர்ந்த விமான ஊழியர்கள் அவரை கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் உட்கார வைக்க விமானத்தில் பயணம் செய்த மருத்துவர்கள் அவருக்கு பதற்றத்தை குறைக்கும் ஊசி போட்டனர். இந்த விமானம் டெல்லி வரும்வரை பயணிகள் பதற்றுடன் காணப்பட்டனர். மேலும் தகராறு செய்த நபரின் மனைவி தன் கணவருக்கு விமானத்தில் வரும்போது பதற்றம் ஏற்படும் என்றும் அதற்கான மாத்திரைகளை அவர் சாப்பிடாமல் இருந்ததால் தான் இப்படி நடந்து கொண்டார் எனவும் விளக்கம் தெரிவித்துள்ளார்.