ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மார்ச் 24 நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் இடையே மார்ச் 25ஆம் தேதி, நாகர்கோவில் மற்றும் தாம்பரம் மார்ச் 24 மற்றும் மார்ச் 31ஆம் தேதிகளிலும், நாகர்கோவில் மற்றும் சென்ட்ரல் ரயில் மார்ச் 24ஆம் தேதியும், சென்ட்ரல் மற்றும் நாகர்கோவில் 25ஆம் தேதி, எழும்பூர் மற்றும் நாகர்கோவில் மார்ச் 28ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதனால் குமரி மற்றும் புனே எக்ஸ்பிரஸ் ரயில் நாளை தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.