ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட காசு கொடுக்காமல் வெற்றி பெறுவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகின்றார்.

நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, தமிழ்நாடு அரசியல் தான் எனக்கு முக்கியம், டெல்லி அரசியலில் விருப்பமில்லை. பிரதமர் மோடியின் விருப்பத்தில் தான் கோவையில் போட்டியிடுகிறேன். தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையிலிருந்து ஆரம்பமாக வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் 40 நாட்கள் தங்கி இருந்து பரப்புரை செய்தாலும் கோவையில் பாஜகவை வெற்றி பெறும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.