குட்டு பட்டு குட்டு பட்டு உங்களின் தலை வீங்கி போய் உள்ளது என தமிழக ஆளுநரை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், உச்ச நீதிமன்றத்திடம் குட்டுப் பட்டு குட்டுப் பட்டு உங்களின் தலை வீங்கிப் போய் உள்ளது. நல்ல மருத்துவரை பாருங்கள். அது உங்களுக்கு நலம் எங்களுக்கும் நலம், பதவி விலகுங்கள் ஆர்.என். ரவி என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சராக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று ஆளுநர் கூறியிருந்த நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் ஆளுநருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் பதவி பிரமாணம் செய்து வைக்கவும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பொன்முடி மீண்டும் அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.