சென்னையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக டிக்கெட் விற்கக் கூடாது, டிக்கெட் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதி செய்து தர வேண்டும் என நிபந்தனை வழங்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை உறுதி செய்து இசைநிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி வழங்கியது. மேலும், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.