தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உள்ள த்ரிஷா நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டினார். அதன் பிறகு விஜயுடன் இணைந்து லியோ  படத்தில் நடித்தார். இந்த நிலையில் . நடிகை நயன்தாரா, சமந்தா அளவுக்கு இல்லையென்றாலும் அதிக பட்சமாக ரூ.70 – 80 கோடி சொத்து த்ரிஷாவின் பெயரில் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ரூ.3 கோடியும், ‘லியோ’வுக்கு ரூ.4 கோடியும் த்ரிஷா சம்பளமாக பெற்றுள்ளார். இதுபோக விளம்பரங்கள் மூலமாக கோடிக்கணக்கில் த்ரிஷாவுக்கு வருமானம் கிடைக்கிறது.