ஹஜ்பயணம் செல்ல விருப்பமுள்ள இஸ்லாமியர்கள் இன்று  மார்ச் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் வருடம் தோறும் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் இஸ்லாமியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த விண்ணப்பத்தை இந்தியா ஹஜ்  இணையதளம் மூலமாக அல்லது மும்பை இந்திய ஹச் குழுவின் எச்கால் என்ற செயலி மூலமாக மார்ச் 10ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யலாம். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.