சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் தனியார் பேருந்துகளை வாங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு 9 தொழிற்சங்கங்கள் கடிதம் எழுதி அனுப்பியுள்ளது.

இந்நிலையில் தனியார் பேருந்துகள் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி அனுப்பிய 9 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் மாநகரப் போக்குவரத்து தனியார் மயமாக்கப்படாது. புதிதாக வாங்கப்படும் மின்சார பேருந்துகளின் பராமரிப்பு பணி மட்டுமே தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.