உத்தரபிரதேச மாநிலம் பாக்யராஜ் பகுதியை சேர்ந்த சைலேந்திர குமார் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீராமர் தொடர்பாக ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தை சேர்ந்த சிவம் மிஷ்ரா அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சைலேந்திர குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.