காவல்துறையின் சார்பாக சென்னை மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் எதிரே சர்வதேச போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நடிகர் கார்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பாடகர் கானா பாலா, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் போன்றோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.

அப்போது கார்த்தி பேசியதாவது “இன்றைய காலக் கட்டத்தில் போதைப் பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் இருக்கிறது. குறிப்பாக படிக்கக்கூடிய இளைஞர்கள் மது அருந்தினர். தற்போது பள்ளி மாணவர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டனர். பள்ளிகளுக்கு அருகில் கூட போதைப் பொருட்கள் சகஜமாக விற்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.