தமிழில் சுல்தான், வாரிசு திரைப்படங்களில் நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, கன்னட திரையுலகிலும் பிரபல நடிகையாக உள்ளார். புஷ்பா படம் இவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. இப்போது இந்தியில் அனிமல் எனும் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர தமிழில் ரெயின்போ படத்திலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் ராஷ்மிகா திரைத்துறைக்கு வந்த தொடக்க காலத்திலிருந்து தன்னிடம் மேனேஜராக பணியாற்றி வந்தவரை நீக்கிவிட்டதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கமளித்து ராஷ்மிகா வெளியிட்டுள்ள அறிக்கையில் “நானும், மேனேஜரும் சுமுகமாகவே பேசி பிரிந்தோம். மோதல் எதுவுமில்லை. இனி நாங்கள் இருவரும் சுதந்திரமாக வேலை செய்ய முடிவு எடுத்து இருக்கிறோம்” என அவர் கூறியுள்ளார்.