தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகிறது. அதாவது, கேரள தொழிலதிபரை மணக்க இருப்பதாக கூறினர். இதையடுத்து துபாய் தொழில் அதிபரோடு இணைத்து பேசப்பட்டார். இதற்கெல்லாம் அவரது குடும்பத்தினர் ஏற்கனவே மறுப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அளித்திருக்கும் பேட்டியில், “என் திருமணத்தில் என்னை விட மற்றவர்கள் அதிக ஆர்வமாக உள்ளனர். சோஷியல் மீடியாவில் எனக்கு திருமணமே செய்து வைத்துவிட்டார்கள். ஏன் இப்படியெல்லாம் வதந்தி பரப்புகின்றனர் என புரியவில்லை. இதையெல்லாம் பார்க்கையில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.