இந்தியாவில் சமூக ஊடகமான வீடியோ புகைப்படம் மற்றும் குறுஞ்செய்திகளை பகிரக்கூடிய ஷேர் சாட் சமீபத்தில் கூகுள் மற்றும் டெமாசெக் மூலம் 300 மில்லியன் டாலர் முதலீடு பெற்றது. இந்நிலையில் முதலீட்டாளர்களிடமிருந்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் விதமாகவும், செலவினங்களை குறைக்கும் விதமாகவும் ஷேர் சாட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 20% ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளது.

இது குறித்து ஷேர் சாட் தலைமை நிர்வாகி அங்குஷ் சச்தேவா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தற்போதைய உலக பொருளாதார சரிவு காரணமாக இந்த முடிவு எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் மூலமாக செலவை குறைக்க முடியும் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஷேர் சாட் 5 பில்லியன் டாலர் மதிப்புடையது. இங்கு சுமார் 2,200 -க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.