வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தேனி, மதுரை ஆகிய 2 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட பாசன பகுதி நிலங்களுக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செல்போனில் செல்பி எடுப்பதையும், தண்ணீரில் இறங்கி சாகசம் செய்யவும் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.