வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தேனி, மதுரை ஆகிய 2 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட பாசன பகுதி நிலங்களுக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செல்போனில் செல்பி எடுப்பதையும், தண்ணீரில் இறங்கி சாகசம் செய்யவும் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!
Related Posts
Breaking: 5% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு உத்தரவு…!!!
தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து அரசு, தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி, இட…
Read moreஅதிமுக மூத்த தலைவர் மலரவன் காலமானார்…. சோகம்…!!
கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில்…
Read more