டெல்லியில் உள்ள மாதங்கீர் பகுதியை சேர்ந்தவர்கள் வேத் பிரகாஷ் – சுசிலா தம்பதி. இந்த தம்பதிக்கு ஆகாஷ் என்ற ஒரு மகன் உள்ளார். சுசீலா வெளியில் சென்று வேலை பார்ப்பது வேத் பிரகாஷ்க்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இதனால் அவ்வப்போது தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது மகனை வீட்டிற்கு வருமாறு பிரகாஷ் அழைத்துள்ளார். ஆகாஷ் வந்தபோது அவரது தாய் சுயநினைவின்றி கீழே கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சடைந்த ஆகாஷ் தனது தாயை கொன்று விட்டீர்களா என்று கேட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில் பிரகாஷ் தான் அவரது மனைவியை கொலை செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.