ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்தி அவர்களுக்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்த நாய்க்குட்டிக்கு வைக்கப்பட்ட பெயரை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். ஆனால் நூரி என்று வைக்கப்பட்ட அந்த பெயர் இஸ்லாம் மதத்திற்கு நெருக்கமானது என்று கூறி அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் தலைவர் முகமது ஃபர்கான் ராகுல் காந்திக்கு நாயின் பெயரை மாற்றிவிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செய்தித்தாள்கள் மற்றும் செய்தி சேனல்கள் மூலமாக அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லை. இதனால் அவர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டு ராகுல் காந்திக்கு சமன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முகமது ஃபர்கான் அவர்களது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.