காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மானாமதி கண்டிகை பகுதியில் செயல்படும் சிபிஎஸ்இ அகாடமியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு செங்கல்பட்டு மாவட்டம் ஆதனூர் பகுதியில் வசிக்கும் சகாயராஜ் என்பவர் பள்ளி தாளாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த பள்ளியில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவன் படித்துள்ளார். இந்நிலையில் சகாராஜ் தொடர்ந்து அந்த மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து சிறுவனின் செயல்களில் மாற்றம் ஏற்பட்டதால் பெற்றோர் அது பற்றி விசாரித்தனர்.

அப்போது சகாராஜ் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததை மாணவன் கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் சைல்ட் லைன் அமைப்பின் மூலம் புகார் அளித்தனர். இதனால் பெருநகர் காவல் துறையினர் செல்வராஜ் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். ஆனால் அவரை இன்னும் கைது செய்யவில்லை. விரைவில் சகாயராஜை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி இது போன்ற குற்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.