தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் தான் அஜித் ஷாலினி. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து அஜித் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அஜித் தன்னுடைய காதலை ஷாலினியிடம் எப்படி கூறினார் என்று உங்களுக்கு தெரியுமா?. அமர்க்களம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் நடிகை ஷாலினி இடம் தன்னுடைய காதலை அஜித் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த தகவலை அப்படத்தின் இயக்குனர் சரண் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஒருமுறை படப்பிடிப்பின் போது இயக்குனர் சரண், ஷாலினி மற்றும் அஜித் மூவரும் ஒரே இடத்தில் சேர் போட்டு அமர்ந்திருந்த போது ஷாலினி ஒரு பக்கமும் அஜித் மறுபக்கமும் இருக்க இவர்கள் இருவருக்கும் இடையே இயக்குனர் அமர்ந்துள்ளார். அப்போது அஜித், படத்தை கொஞ்சம் சீக்கிரமா முடிங்க சரண் என்று கூறியுள்ளார். இது ஷாலினிக்கு கேட்க, அதன் பிறகு அஜித், படப்பிடிப்பை சீக்கிரமா முடிங்க சரண் இல்லனா இந்த பொண்ண எங்கனா காதலித்து விடுவேன் என பயமா இருக்கு, அதனால் சீக்கிரமாக படபிடிப்பு முடித்திடுங்கள் என்று கூறியுள்ளார். இது ஷாலினிக்கு கேட்டு அவர் முகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இப்படித்தான் அஜித் தன்னுடைய காதலை சாரினியிடம் கூறியுள்ளார்.