மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் (24) என்ற மகன் இருக்கிறார். இவர் பூம்புகார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்  சிந்துஜா (20) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஆகாஷுக்கு வேறு பெண்ணுடன் பழக்கம் இருப்பதாக சிந்துஜா கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த இரு நாட்களாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இவர்கள் இருவரும் பூம்புகார் கடற்கரைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர்‌. அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சிந்துஜா பைக்கை நிறுத்துமாறு கூறியுள்ளார். அவர் பாலக்கரை என்ற இடத்தில் பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது சிந்துஜா தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளித்தார். இதனால் பதறிப்போன ஆகாஷ் தீயை அணைக்க முயற்சி செய்தார். இதனால் அவர் மீதும் தீக்காயம் ஏற்பட்டது. இதனால் ஆகாஷுக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.