நாகையில் சீமான் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சி மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சீமான் பரப்புரையின் போது, தாரை தப்பட்டை உடன் திமுகவினர் ஊர்வலமாக தங்களது கூட்டணி கட்சியினருடன் சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்தால் நாம் தமிழர் கட்சியினர் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு கேட்க சென்ற திமுகவினருடன் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சீமான் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.