ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடியில் இருந்து ஒரு வேன் கோபி நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 5 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் ரங்கன்காட்டூர் காலனி அருகே சென்ற போது கவுந்தப்பாடி நோக்கி சென்ற காரும், வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேன் மற்றும் காரில் பயணித்த 10 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 10 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.