கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை பையூர் பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோமதி தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கோமதியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.