தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தம்மனம்பட்டி கிராமத்தில் சபாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா(8), மோனிகா(6), என்ற 2 மகள்களும், தமிழ் இனியன்(3) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் சஞ்சனா அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பும், மோனிகா ஒன்றாம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று முன்தினம் விடுமுறையை முன்னிட்டு அக்காள், தங்கை, தம்பி ஆகியோர் ஒரு சைக்கிளில் அருகே இருக்கும் ஏரியில் குளிப்பதற்காக சென்றனர். தமிழ் இனியனை கரையில் அமர வைத்துவிட்டு அக்காள், தங்கை இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கினர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் தமிழ் இனியன் அழுது கொண்டே வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்தான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் ஏரிக்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமிகளின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த