முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணிக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியாக கௌதம் சிகாமணி வெற்றி பெற்றிருந்தார். அதனைப் போலவே தஞ்சையில் ஆறு முறை எம்பியாக இருந்த முன்னாள் அமைச்சர் பழனி மாணிக்கத்திற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி எம்பி ஆக இருந்த செந்தில்குமார், சேலம் எம்பி ஆக இருந்த பார்த்திபனுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தென்காசி தனித் தொகுதியில் இருந்து கடந்த முறை வெற்றி பெற்ற தனுஷ் குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இத்தொகுதி ராணி என்ற பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.