புதுக்கோட்டை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் கிச்சடி அருகே சின்னையா சத்திரம் என்ற இடத்தில் காரும், லோடு வேன் ஒன்றும் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக காரில் வந்த முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் விபத்தை கண்டதும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஓடோடி வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அவர்களுக்கு உதவி சிகிச்சை செய்து தன்னுடைய காரிலேயே புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து  மனிதநேயத்துடன் செயல்பட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்ட முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் செயலை கண்டு பலரும் பாராட்டி வருகிறார்கள்.