புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுசுகி மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகியவை பல சலுகைகளை அறிவித்துள்ளன. அதன்படி மழை நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டதாகவும் வாடிக்கையாளர்களுக்கு உதவ 37 சாலை உதவி வாகனங்களை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவச சாலையோர சேவை உதவி மற்றும் கட்டணமில்லாத வாகனம் பழுது மதிப்பீட்டு சேவை ஆகியவை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேவை கட்டணங்களில் தள்ளுபடியும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.