பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்பு காரணமாக கடந்த வருடம் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை மற்றும் பாலங்களும்  நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ள பாதிப்பில் பல ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். மேலும் 1700 -க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்பார்த்தது.

இதனிடையே பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கனை வாஷிங்டன் நகரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கு பின் முதல் கட்டமாக பாகிஸ்தானின் வெள்ள நிவாரண மற்றும் மனிதநேய அடிப்படையில் ஆன நிதி உதவியை அமெரிக்கா ஒதுக்கியது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் 100 மில்லியன் டாலரை உணவு பாதுகாப்பு உதவி தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.