வெளிநாட்டில் வேலை என பதிவு செய்யாத ஆட்சேர்ப்பு முகவர்களிடம் ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி ஏமாறுவோர் எண்ணிக்கை தினம் தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் 1983 ஆம் ஆண்டு குடியேற்ற சட்டத்தின்படி எந்த ஒரு பதிவு செய்த ஆட்சேர்ப்பு முகவரும் முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வசூலிக்க அனுமதி இல்லை. உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு முகவர்கள் பட்டியலை www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.