மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி அழைத்து சென்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, எம்.பி. தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பேசிய கனிமொழி, எம்.பி, “உலகத்தையே உலுக்கும் அளவுக்கு மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடி, மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மணிப்பூரில் வன்முறையைத் தடுக்க பாஜக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அப்பாவி பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி என்ன செய்து கொண்டு இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.