நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் 2004 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் தங்களுடைய 18 வருட கால திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக கடந்த வருடம் அறிவித்தனர். ஆனால் இவர்கள் இருவருமே அடிக்கடி தங்களுடைய குழந்தைகளை சந்திப்பதுண்டு. தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யாவும் விஷ்ணு விஷால் விக்ராந்த் ஆகியோர வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் மகன்கள் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றுள்ளதை தன்னுடைய twitter பதக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில் எவ்வளவு கடுமையான சூரிய ஒளியாலும் என்னுடைய பிள்ளைகளின் விளையாட்டு ஆர்வத்தை நிறுத்த முடியாது. காலை வெயிலில் ஓடி களைத்து போய்விட்டனர். வெளியில் அவர்கள் ஒளிர்வதை பார்க்க முடிந்தது என்று பதிவிட்டுள்ளார்.