மகாபா ஆனந்த் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுப்பாளினி பிரியங்காவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து நல்ல காமெடி செய்து நிகழ்ச்சியை நன்றாக கொண்டு செல்வார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்காக பார்க்கும் ரசிகர்களை விட இவர்களின் பேச்சுக்காகவே பார்க்கிற ரசிகர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில்  சீசன் 9 தொடங்கியிருக்கும் நிலையில் இந்த செய்தி சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அவருக்கு பதிலாக பிரியங்காவுடன்  இணைந்து ரியோ ராஜ் சூப்பர் சிங்கரை தொகுத்து வழங்குவார் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம் ஒரு எபிசோடை மட்டுமே ரியோ தொகுப்பார் என்றும் கூறப்படுகிறது.