சென்னை தரமணியை சேர்ந்த மூதாட்டி சாந்தகுமாரி வீட்டில் தனியாக இருந்தபோது முகத்தில் காயத்துடன் மர்ம முறையில் இறந்து கிடந்தார். அதோடு வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 31/2 லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, உயிரிழந்த மூதாட்டியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஸ்ரீஜா மற்றும் அவரது சகோதரர் விஜய்பாபு போன்றோர் பணத்திற்காக இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

அதன்பின் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த சாந்தகுமாரியின் மருமகன், ஸ்ரீஜாவை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகாரளிக்க வேண்டாம் எனவும் பணம் தருவதாவும் கூறி சாந்தகுமாரி ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஸ்ரீஜாவும், அவரது தம்பி விஜய்பாபுவும் பீரோவிலிருந்து 3 1/2 லட்சம் ரூபாய் பணத்தை திருடியபோது சாந்தகுமாரி விழித்துக் கொண்டதால் அவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.