பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்த கணேசன்  என்பவரின் 14 வயது மகனான ரோஹித் ராஜ் சாலையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது மது போதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்ற இளைஞர், சிறுவனை அங்குள்ள ஒரு பொதுக்கழிப்பிடத்திற்கு அழைத்து சென்று மதுபாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் சீனிவாசனின் நண்பர் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகவுள்ள சீனிவாசனையும், அவரது நண்பரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.